1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (17:08 IST)

பிரச்சனைகளை மறந்து சிம்புவோடு நடிப்பாரா நயன்தார? பேச்சுவார்த்தை மும்முரம்!

ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து வரிசையாக 2 படங்கள் தயாரிக்க உள்ளதாகவும், அந்த இரண்டு படங்களையும் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த படங்களில் ஏதாவது ஒன்றில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

வல்லவன் படத்தின் போது சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியவர்களுக்கு இடையே காதல் உருவாகி பின்னர் இருவரு கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு இது நம்ம ஆளு படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடித்து நண்பர்களாகினர். ஆனால் அதன் பின்னர் நடந்த விருது விழா ஒன்றில் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது மீண்டும் சிம்புவோடு இணைந்து நடிக்க நயன்தாரா சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நயன்தாராவுக்கு மூக்குத்தி அம்மன் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ள நம்பிக்கையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.