வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (09:27 IST)

ஐஸ்வர்யாவை ஏன் யாருமே தடுக்கவில்லை: நித்யா கேள்வி

ராணி மகாராணி டாஸ்க்கின் போது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பையை கொட்டியபோது ஏன் யாருமே தடுக்கவில்லை என நித்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த சீசனில் வெளியேறிய போட்டியாளர்கள் இருவர் ஒவ்வொரு நாளும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். நேற்று வைஷ்ணவியும் ரம்யாவும் வந்த நிலையில் இன்று நித்யாவும் ஷாரிக்கும் வருகை தந்துள்ளனர்

போட்டியாளர்கள் மத்தியில் நித்யா பேசியபோது, 'பாலாஜி மீது ராணி மகாராணி டாஸ்க்கின்போது ஐஸ்வர்யா குப்பையை கொட்டியது மன வருத்தத்தை தந்தது. ஆனால் அவர் மீது எனக்கு ஏற்பட்ட கோபத்தை விட மற்ற போட்டியாளர்கள் மீது அதிக கோபம் வந்தது. நீங்கள் யாராவது நினைத்திருந்தால் ஐஸ்வர்யாவை தடுத்து அவருக்கு அறிவுரை கூறியிருக்கலாம். ஆனால் யாருமே ஏன் அதை செய்யாமல் ஓரமாக பேசாம இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த டாஸ்க்கின்போது ராணிக்கு ஆலோசகராக இருந்த ஜனனி, ஐஸ்வர்யா குப்பையை கொட்டியதை தடுக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நித்யாவின் கேள்வியால் அவர் அதிர்ச்சி அடைந்தார்