1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (21:23 IST)

நண்பனின் துணையோடு ரஜினியுடன் மோதும் விஷால்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை அடுத்து உடனடியாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகளை இப்பொழுது முதலே அவர்கள் செய்து வருகின்றனர் 
 
 
இந்த நிலையில் ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியாகும் அதே பொங்கல் தினத்தில் கார்த்தியின் திரைப்படம் ஒன்றும் வெளியாக இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது. திரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் படம் ஒன்றில் கார்த்திக் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படமும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று தெரிகிறது 
 
 
இந்த நிலையில் தற்போது திடீரென விஷாலின் அடுத்த படமும் பொங்கலில் வெளியாகும் என செய்திகள் வெளியாகி உள்ளது. விஷாலின் 28 வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை எம்எஸ் ஆனந்தன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இளம் இசை இசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷராதா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்
 
 
எனவே ரஜினி படத்துடன் விஷால் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கார்த்தி ஆகிய இருவரின் திரைப்படங்கள் மோத உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது