1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (05:16 IST)

வல்லரசை பிறகு பார்த்து கொள்ளலாம். முதலில் நல்லரசு கொடுங்கள்: விஜய்

பிரபல சினிமா இணையதளம் ஒன்று நேற்று நடத்திய விருது வழங்கும் விழாவில் இளையதளபதி விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய விஜய், தற்போதைய தமிழக அரசுக்கு சூடு வைக்கும் வகையில் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


விஜய் பேசியதாவது: "மூன்று வேளையும் தவறாமல் உணவு கிடைப்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லோரும் இருக்கிறோம். ஆனால் அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகள் நன்றாக இல்லை. அவர்கள் இலவச அரிசிக்காக ரேஷன் கடைசியில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.

வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள்" என்று பேசினார்

இந்த விழாவில் வருக்கு  'தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிசின் சாம்ராட்' விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.