1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:04 IST)

ஜி வி பிரகாஷ் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது பாண்டிச்சேரியில் இறுதிகட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பாண்டிச்சேரியிலேயே நடந்து வரும் ஜி வி பிரகாஷ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கும் இடிமுழக்கம் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.