1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (10:18 IST)

என்னது கதையா?... சிவகார்த்திகேயனின் கேள்விக்கு ஷாக் ஆன இயக்குனர்!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இயக்குனர் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின.  இப்போது வெங்கட்பிரபு நாக சைதன்யா படத்தை இயக்கி முடித்ததும் இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிரின்ஸ் படத்தின் ப்ரமோஷனுக்காக டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது சிவகார்த்திகேயனிடம் கேள்வி கேட்ட வெங்கட்பிரபு “நாம எப்போ ஷூட்டிங் போகலாம்” எனக் கேட்டார். இதனால் இருவரும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.  

அதற்கு சிவகார்த்திகேயன் “கதை  எப்போ சார் சொல்வீங்க” எனக் கேட்க, அதற்கு வெங்கட்பிரபு “கதையா?” எனக் கேட்டு ஷாக் ஆகியுள்ளார்.