1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (22:20 IST)

மாமன்னன் படக்குழுவோடு வடிவேலு… படக்குழுவினர் அளித்த மரியாதை!

நடிகர் வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்  நடிகர் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்த மாரி செல்வராஜ் ‘நிறைவேறிய தொடர்கனவு’ என குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க தொடங்கியிருப்பது அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இன்று வடிவேலு மாமன்னன் படப்பிடிப்புத் தளத்தில் படக்குழுவினரோடு இணைந்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் பரவி கவனத்தைப் பெற்றுள்ளது.