1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 11 ஜூன் 2020 (23:04 IST)

பாகுபலி பட இயக்குநரை டென்சன் கொடுத்த இரண்டு நடிகைகள் !

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் மிகப்பெரும் வசூல் சாதனை செய்த படம்  பாகுபலி. இப்படத்தை இயக்கிய ராஜமௌலி இப்போது ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இரண்டு ஹீரோக்களை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற  படத்தை இயக்கி வருகிறார்.

ஆங்கிலேயர் கால சுதந்திர போராட்ட காலத்தில் தயாராகி வரும் இப்படத்தில் இருவரும் சுதந்திர போராட்ட வீரர்களாக நடித்து வருகின்றனர். இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் லண்டனை சேர்ந்த ஹீரோயின் ஓலிவியா இவ்வருடம் தன்னால் வந்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாக  தெரிகிறது. இன்னொரு நடிகையான பாலிவுட் நடிகை ஆலியா பட் தான் வேறொரு படத்திற்குக் கொடுத்த ஹால்சீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று ராஜமௌலியிடம் கூறி அவரை டென்சன் ஏற்றியுள்ளதாக தகவல் வெளியாகிறது .