வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2020 (16:31 IST)

டாப் ஹீரோ, ஹீரோயின்களின் போதை பழக்கம்....பாதுக்காப்பு தந்தால் சொல்கிறேன் - நடிகை ஸ்ரீரெட்டி

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது காதலி ரியாவை போலீஸார் கைது செய்து  விசாரித்து வந்தனர். இவ்வழக்கில் அதிரடி திருப்பமாக போதை மருத்து கடத்தல் வழக்காக மாறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில நடிகர்கள் இதில் சிக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கன்னட திரையுலகில் ராகினி திவேதி,சஞ்சனா கல்யாணி போன்ற நடிகைகள் இவ்வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல ஹீரோக்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது  போதைப் பொருள் பயன்படுத்தும் பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்களின் பெயரை கூறத் தயார் என்றும், அவர்கள் நடத்தும் பார்டியில் போதைப் பொருள்  இல்லாமல்  பார்ட்டி நடைபெறுவதில்லை என்றும்… அவர்களின் பெயர்களைச் சொல்லத் தான் தயார் ஆனால் தெலுங்கானா அரசு தக்க பாதுகாப்பு தரவேண்டுமென ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.