1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (09:25 IST)

சமந்தாவுக்கு ஆறுதல் வார்த்தைக் கூறி நம்பிக்கை அளிக்கும் திரையுலக பிரபலங்கள்!

வழக்கமாக சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக எந்தவொரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் அவர் தோல் சம்மந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. அதனால் தான் அவர் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என்று வதந்திகள் கிளம்பின. இந்நிலையில் தனக்கிருக்கும் உடல்நலப் பிரச்சனை குறித்து சமந்தா பதிவிட்டுள்ளார்.

அதில் “யசோதா டிரெய்லருக்கு உங்கள் எதிர்வினை அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறிது அதிக நேரம் எடுக்கும். நாம் எப்பொழுதும் வலுவான முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் மெதுவாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்வது நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் ஒன்று. நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு.... உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும்…. மேலும் ஒரு நாளை என்னால் கையாள முடியாது என்று உணர்ந்தாலும், எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. நான் குணமடைய இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது என்று இருக்கிறது.” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் சமந்தாவுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி வருகின்றனர். அதில் மெஹா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குனர் வம்சி மற்றும் அகில் நாகார்ஜுனா ஆகியோர் விரைவில் குணமாகி வரவேண்டும் என ஆறுதல் வார்த்தைகளைக் கூறி வருகின்றனர். அவர்களுக்கு சமந்தா தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.