தனி ஒருவன், மிருதன் படங்களில் மண்ணை வெற்றி கொண்ட ஜெயம் ரவி விண்ணை வெற்றிக் கொள்ள துடிக்கிறார்.
என்னடா இது என்று தலையை பிய்க்கிற மாதிரி இருக்கிறதா?
ஸோம்பி என்ற புதிய களத்தில் ஒரு படத்தை இயக்கி வெற்றியும் பெற்ற சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் ஜெயம் ரவியை இயக்குகிறார். இது மிருதன் போன்று முற்றிலும் வித்தியாசமான கதையாம். விண்வெளியை மையப்படுத்தி இந்தக் கதையை சக்தி சௌந்தர்ராஜன் எழுதி வருவதாக செய்திகள் கூறுகின்றன.