வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:29 IST)

பத்திரிக்கையாளர்களை தாக்கினார்களா தமன்னாவின் பாதுகாவலர்கள்?

நடிகர் தமன்னா நடிக்கும் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு  ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலும் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக தமன்னா ஐதராபாத் வந்தார். அப்போது அவரைப் புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் கேட்க அதற்கு தமன்னாவின் பாதுகாவலர்கள் மறுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் பவுன்ஸர்கள் பத்திரிக்கையாளர்களை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.