ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (14:06 IST)

விஞ்ஞானி படத்தில் மாதவனுடன் சூர்யா...?

இஸ்ரோவில், திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானி நம்பி நாராயணன்.  
 
ஆனால் அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, நம்பி மீது கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.  பின்னாளில் வழக்கு விசாரணைக்கு வர, நம்பி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்து 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
 
பிறகு விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்த கேரளா முதல்வா் பினராயி விஜயன் அவரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.  தற்போது, இவரின் கதையை 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படமாக்க இருக்கின்றனர். 
 
அதை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். அதில், நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடித்துள்ளார் . 
 
இந்தத் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என நேற்று நடிகர் மாதவன் தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார். 
 
அதற்கு பதிலளித்திருந்த நடிகர் சூர்யா, "இது ரொம்ப அற்புதமானது. இந்த கனவு திரைப்படத்தில் பங்கெடுத்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம் மனம் சொல்வதை செய்வோம்" என பதிவிட்டிருந்தார். 
 
அதற்கு மாதவன் "நீங்கள் அமேஸிங் பிரதர். எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு என்னை வாயடைக்க செய்து விடுகிறீர்கள். சூர்யாவுக்காக கடவுளுக்கு நன்றி" என மாதவன்  ரீட்வீட் செய்துள்ளார். 
 
இதிலிருந்து மாதவனுடன் சூரியாவும் இணைத்து நடித்திருப்பது போல் தெரிகிறது. ஆனால் இதை பற்றி எந்த விதமான அதிகாரபூர்வ தகவலும் இதுவரை படக்குழுவினர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.