1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஏப்ரல் 2021 (15:11 IST)

மாரி செல்வராஜோடு கைகோர்க்கிறாரா சூர்யா? அப்போ வாடிவாசல்!

நடிகர் சூர்யா அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு படங்களுமே பாரட்டுகளையும் நல்ல வசூலையும் பெற்று அவரை முக்கியமான இயக்குனராக ஆக்கியுள்ளன. இந்நிலையில் நடிகர் சூர்யா கர்ணன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அவருடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

கலைப்புலி தானு ஏற்கனவே சூர்யாவின் தேதிகளை வாடிவாசல் படத்துக்காக பெற்று வைத்துள்ளார். ஆனால் அந்த படம் தொடங்குவதற்கு தாமதமாகும் என்பதால் அதற்கிடையில் சூர்யா மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் ஒரு படத்தை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.