1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (07:04 IST)

மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்த சூர்யா!

சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மும்பை திரும்பினார் சூர்யா. அப்போது விமான நிலையத்தில் அவரை பத்திரிக்கையாளர்கள் புகைப்படங்கள் எடுத்தனர்.

அப்போது சூர்யா தன்னோடு வந்திருந்த தன்னுடைய மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தார். அதையேற்று பத்திரிக்கையாளர்கள் அவரது மகன் தேவ்வை புகைப்படம் எடுக்கவில்லை.