வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (10:18 IST)

“சூர்யா படத்தில் எனக்குப் பெயரே கிடையாது” - கீர்த்தி சுரேஷ்

சூர்யா ஜோடியாக நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் எனக்குப் பெயரே கிடையாது என நடிகை கீர்த்தி சுரேஷ்  தெரிவித்துள்ளார்.
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.
 
“இந்தப் படத்தில் நான் பிராமணப் பெண் வேடத்தில் நடித்துள்ளேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹியூமர் கலந்த சஸ்பென்ஸ் வேடத்தில் நடிக்கிறேன். விக்னேஷ் சிவன் கதை சொல்லும்போதே எனக்கு கதையும், என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.
 
பள்ளிப் பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா, சூர்யாவின் தந்தை சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும்போது சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன் ஒருநாள் கதாநாயகியாக நடிப்பேன்  என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி. சூர்யா சார் மிகவும் அமைதியானவர். அதிகம்  பேசமாட்டார். ஆனால், அவரிடம் நான் சந்தேகம் கேட்கும்போது எனக்கு சொல்லிக் கொடுத்து உதவுவார்.
 
செந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் டெடிபியரைப் போல கியூட்டான மனிதர். அவரோடு நடித்தது எனக்கு  மறக்க முடியாத நல்ல அனுபவம். ரம்யா கிருஷ்ணன், அம்மாவின் தோழி. எனக்கு அவங்களை சின்ன வயதிலிருந்தே தெரியும். ‘பாகுபலி’ வெளியான நேரத்தில் அவங்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.