1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (17:32 IST)

மாநாடு முடிவதற்குள் அடுத்த படத்தை ஆரம்பித்த சுரேஷ் காமாட்சி! இயக்குனர் இவரா?

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் ராம் இயக்க உள்ளார்.

நடிகர் நிவின் பாலி நேரம் மற்றும் பிரேமம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு ரிச்சி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அந்த படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது. அதன் பின்னர் அவர் மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அவர் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

அந்த படத்தை கற்றது தமிழ் மற்றும் பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ராம் இயக்கிய பேரன்பு திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அங்கு அவரது படங்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம்.  இந்த படத்தை சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளாராம். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இந்த படம் உருவாக உள்ளதாம்.