1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (16:30 IST)

சூப்பர் ஸ்டார் செய்யும் உதவிகள் இருட்டடிப்பு !

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர், தான் கொரொனா காலத்தில் செய்துவரும் உதவிகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் தற்போது ஆச்சார்யா என்ற படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்கிலும்  நடித்து வருகிறார்.  இப்படத்தை மோகன் ராஜா இயக்கிவருகிறார். இப்படத்திற்கு ’கிங் மேக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொரொனா தொற்று பரவியது முதல் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு உதவிகள் செய்து வரும் சிரஞ்சீவி தற்போது, சுவாச பிரச்சனையால் உயிர்கள் பலியாகக் கூடாது எனப் பல  கோடி மதிப்பில் ஆக்ஸிஜன் வங்கியைத் தொடங்கியுள்ளார்.  ஆனால் இதுகுறித்து செய்திகளைப் பத்திரிக்கைகள் வெளியிடுவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.