வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (08:41 IST)

மோசடி புகாரில் சிக்கிய சன்னி லியோன்… முன் ஜாமீன் கேட்டு மனு!

பிரபல நடிகை சன்னி லியோன் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்று பின்னர் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் சமீபத்தில் கேரளாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நடக்கவிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சன்னி லியோனுக்கு, ஷியார் என்பவர் 29 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக அவர் கேரள போலிஸில் புகார் அளித்தார். இதையடுத்து அவர் கைதாகும் சூழல் உருவானவதால் இப்போது சன்னி லியோன் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.