1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2021 (22:46 IST)

மாகாபா ஆனந்த்துக்கு இவ்வளவு பெரிய மகனா?? ரசிகர்கள் ஆச்சர்யம்

விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடிகராக உயர்ந்தவர் மாகாபா ஆனந்த்.  இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

எம்.எம்,ரேடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றி பின்,விஜய் டிவில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் மாகாபா ஆனந்த். இவர் ஆங்கிலோ இந்திய பென் சுசிலா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்று அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில்  தனது குடும்பத்தினருடம் கால்பந்து விளையாட்டைப் பார்ப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், அவரது தோளின் மேல் கால்போட்டு அவரது மகன் கால்பந்து விளையாட்டை ரசிக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் மாகாபா ஆனந்துக்கு இவ்வளவு பெரிய மகனா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.