வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (21:31 IST)

உனக்கு அறிவே இல்லை: டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த ’கைதி’ தயாரிப்பாளர்

வரும் தீபாவளி அன்று விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படமும், கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது. ஒரே நாளில் விஜய், கார்த்தி ஆகியோர்களின் படங்கள் வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் மற்றும் கார்த்தி ரசிகர்கள் டுவிட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து மோதி வருகின்றனர்
 
இந்த மோதலில் கைதி பட தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்களும் கடந்த இரண்டு நாட்களாக கலந்துள்ளார். ஏற்கனவே ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’நான் நல்ல பாம்பு, நல்ல படம் மட்டுமே எடுப்பேன்’ என்று கலாய்த்து பதில் அளித்த எஸ்,ஆர் பிரபு தற்போது ’கைதி’ படத்திற்கு டிக்கெட் எடுத்த விஜய் ரசிகர் ஒருவரை உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, ஆனால் அறிவு இல்லை என்று கலாய்த்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அந்ஹ விஜய் ரசிகர் தனது டுவிட்டரில் பிகில் படத்திற்கு டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக கைதி படத்திற்கு தெரியாமல் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து விட்டேன். இப்போது இந்த டிக்கெட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்குத்தான் கைதி தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ‘தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு ஆனால் அறிவு இல்லை போ’ என்று கலாய்த்தார். இந்த கலாய்ப்பு விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது