ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 24 ஜூலை 2024 (10:29 IST)

MTV Splitsvilla X5: ExSqueeze Me Please இன் சமீபத்திய எபிசோடில், ஹர்ஷின் சர்ச்சைக்குரிய முடிவை சன்னி லியோன் ஆதரித்தார்!

இதயங்களின் ராணி சன்னி லியோன், ஸ்பிளிட்ஸ்வில்லாவில் உருவான பிணைப்புகளைப் பற்றிப் பேசினார்....
 
நீங்கள் மனதுக்கு பிடித்த ஒருவரை சந்திப்பதைதான் ஸ்பிளிட்ஸ்வில்லா செய்கிறது, அவர்களுடன் இதுபோன்ற அற்புதமான பிணைப்புகளையும், வாழ்க்கைக்காக நீங்கள் கடைசி வரை சுமந்து, செல்லும் நல்ல உறவையும் உருவாக்குகிறீர்கள்!" என்றார்.
 
சிவெட்டின் ரீ என்ட்ரிக்குப் பிறகு, டோம் அமர்வில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. அதன் பிறகு குற்றச்சாட்டுகளை போட்டியாளர்கள் அடுக்குகின்றனர்.
 
அக்ரிதி, தனது அவப்பெயரை அழிக்க ஆசைப்பட்டு, ஆட்டத்தில் இருந்து விலகுவது பற்றி யோசிக்கிறார். அதற்குள், ஒரு புதிய போட்டிக்கான அறிவிப்பு வருகிறது. சன்னியும் தனுஜும் எதிர்பாராத விதமாக அங்கே வந்து மேலும், நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்துகின்றனர். சிவெட்டிடம் தனது செயல்களை நியாயப்படுத்த ஆடியின் முயற்சி தோல்வியடைகிறது.
 
தனுஜ் மற்றும் சன்னி ஆகியோர் 'பால் நா ஹல்கே ஹல்கே' போட்டியில் களமிறங்குவதற்கான நேரம் இது என்பதை வெளிப்படுத்துகின்றனர். நீச்சல் குளத்தில் கவர்ச்சி பொங்க நடைபெற்ற இந்த சவாலில், ஒரு கோல்கீப்பர் இரண்டு ஜோடிகளின் தாக்குதல்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டும். 
 
இதில், ட்விஸ்ட் என்னவென்றால் தங்கள் பெண் ஜோடியை ஆண் போட்டியாளர்கல் தோளில் தூக்கி சுமந்துக் கொண்டு விளையாட வேண்டும். 
 
அனைவரையும் தங்கள் இருக்கைகளின் நுனிக்கே கொண்டு வந்த இந்த சவாலில், ஹர்ஷும் சுபியும் சிறப்பாக கோல்களை போட்டு வெற்றி பெற்றனர். 
 
அவர்கள் சச்சின், உன்னதி மற்றும் ஷோபிகாவிடம் இருந்து விடைபெற்று, சூடான வாக்குவாதங்களின் புயலைக் கிளப்பினார்கள். ஹர்ஷின் முடிவால் ருஷாலி கோபமடைந்தார். ஆனால், ஹர்ஷின் இந்த முடிவுக்கு சன்னி லியோன் ஆதரவு தெரிவித்தார்.
 
ருஷாலி உன்னுடைய சிறந்த ஐடியல் மேட்ச் இல்லை என்பதை நீ தேர்வு செய்தது சரியான விஷயம் என்றும் சன்னி லியோன் தட்டிக் கொடுத்தார். 
 
உன்னதி வெளியேறியதால் மனம் உடைந்த திக்விஜய், வில்லாவின் சவால்களை தனியாக எதிர்கொள்ள முடிவு செய்கிறார்.தான் வருந்துவதை பார்த்து அக்ரிதி சந்தோஷப்படுவதாக ருஷாலி கூறுகிறார். அதே நேரத்தில் சுபியின் மனவேதனையைப் பற்றிய கருத்து ருஷாலியின் கோபத்தைத் தூண்டி, ஹர்ஷுடன் கடுமையான மோதலுக்கு வழிவகுத்தது.
 
லவ் டெனில், ஆடி மற்றும் காஷிஷ் தங்களது உடைந்த பிணைப்பைச் சரிசெய்வார்கள் என்று நம்புகிறார்கள். இப்படி பதட்டமான சூழ்நிலையில், அடுத்த சவால் 'ஆ டெக்ஹென் ஜாரா, கிஸ்மே கித்னா ஹை தம்,' அறிவிக்கப்படுகிறது. ஆடி, காஷிஷ், ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி ஆகியோர் தங்களின் ஐடியல் ஜோடியை தேர்வு செய்ய கடும் சவாலை சந்திக்கின்றனர். பந்துகளை குறி பார்த்து பக்கெட்டுகளில் போட வேண்டும் என்றும் பக்கெட்டுகளில் இருக்கும் சாவிகளை கண்டு பிடித்து அடுத்த ஸ்டேஜுக்கு சென்று இதயத்தை கைப்பற்றி வெற்றிப் பெற வேண்டும் என ஆட்டம் சூடு பிடிக்கிறது. 
 
இந்த ஸ்ப்ளிஸ்ட்வில்லா எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் சீசன் 5 விளையாட்டில் சில ஜோடிகள் செம டஃப் கொடுத்து விளையாடி வருகிறது. சில ஜோடிகளுக்கு இடையே சில குழப்பங்கள் நிலவி வருகின்றன. வரும் வாரங்களில் ஆட்டத்தின் போக்கு மேலும், மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.