1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (12:45 IST)

கொரோனாவுக்கு பிறகு அதிக அளவில் புக்கிங் ஆன படம்! – ஸ்பைடர்மேன் சாதனை!

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக அதிக அளவிலான முன்பதிவுகளை ஸ்பைடர்மேன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த ஆண்டு முதலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படமான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவுகள் முன்னதாகவே தொடங்கப்பட்ட நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 1,50,000 பேர் டிக்கெட் புக்கிங் செய்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா தளர்வுகளை தொடர்ந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு இந்தியா முழுவதும் அதிகமான முன்பதிவுகளை பெற்ற படமாக ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மார்வெல் சூப்பர்ஹீரோ திரைப்படமான ஸ்பைடர்மேனுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.