வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (11:01 IST)

டபுள் ஹீரோ கதைகளுக்கு ஓகே சொன்ன சிவகார்த்திகேயன்… ஆனால் ஒரு கண்டிஷனுடன்!

சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு மிக பிரம்மாண்டமான படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிரம்மாண்ட படங்கள் எடுப்பது அதிக ரிஸ்க்கான வேலை என்பதால் ரிஸ்க்கை குறைப்பதற்காக இரண்டு ஹீரோக்கள் மற்றும் வெவ்வேறு மொழிகளில் இருந்து நடிகர்களை நடிக்க வைத்து அந்தந்த மாநில ரசிகர்களுக்கு அந்த மொழியில் உருவாக்கப்பட்ட படம் போன்றதொரு தோரணையை இயக்குனர்கள் கொடுக்கின்றனர். பொதுவாக தெலுங்கு சினிமாவில் இதுபோல ஹீரோக்கள் இணைந்து நடிப்பது அதிசயம். ஆனால் அங்கு கூட இது சாதாரணமாக இப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழில் முன்னணியில் இருக்கும் சிவகார்த்திகேயனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது ‘எனக்கும் அதுபோன்ற கதைகளில் மற்ற கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பது சம்மதம்தான். ஆனால் இரண்டு கதாநாயகர்களுக்கும் திரையில் சமமான முக்கியத்துவம் இருக்கவேண்டும்’ என நிபந்தனை விதித்துள்ளாராம்.