1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (14:18 IST)

தொடர் தோல்வி படங்கள்...சம்பளத்தை பாதியாகக் குறைந்த ரஜினி பட நடிகர்!

Shooting
தன் படங்கள் தொடர் தோல்வி அடைந்துள்ளதால்  முன்னணி நடிகர் தன் சம்பளத்தைக் குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தி சினிமாவில்  சூப்பர் ஸ்டார்  அக்ஷ்ய் குமார். சில ஆண்டுகள் முன்பு வரை இவர் நடித்த  படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி, வசூலை வாரிக் குவித்தன. இதனால் இவரது கிராப் எகிறியதுடன் சம்பளமும் அதிகரித்தது.

இந்தி சினிமாவில் , மூன்று கான்   நடிகர்களுக்கு இணையாகச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த  அக்ஷ்ய்குமாரின் கடைசியாக  ஹிட் படம் லட்சுமி பாம். இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை அடுத்து, சாம்ராட் பிரித்விராஜ் பெல்பாட்டம், பச்சன் பாண்டே உள்ளிட்ட 3 படங்கள் படுதோல்வி அடைந்தன.  இதுவரை நடித்த படங்களுக்கு  அக்ஷ்ய்குமார் ரூ.130 முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் பெற்று வந்த நிலையில்,   இவர் அடுத்து நடிக்கவுல்ல சோஹ்டே மியான் படத்திற்கு ரூ. 150 கோடி சம்பளம் ஒப்பந்தம் செய்த  நிலையில், 3 படங்களின் தொடர் தோல்வியால் அக்ஷ்ய்குமாரின் சம்பளம் 50% குறைந்துள்ளது, இதனால் , ரூ.75 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.