ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (17:08 IST)

கொரோனாவால் தெருவில் காய்கறி விற்கும் சீரியல் இயக்குனர்!

கொரோனா காரணமாக வேலை இல்லாத இந்தி சீரியல் இயக்குனர் ஒருவர் தெருவில் தள்ளுவண்டி கடையில் காய்கறி விற்க ஆரம்பித்துள்ளார்.

கொரோனா காரணமாக அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் சினிமா மற்றும் சின்னத்திரையும் ஒன்று. சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள்  முதல் அதன் இயக்குனர்கள் வரை வேலை இல்லாததால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல இந்தி தொலைக்காட்சி சீரியலான பாலிகா வாதுவின் இயக்குனர் ராம வ்ருக்‌ஷா கவுர் வேலை இல்லாததால் காய்கறி விற்க ஆரம்பித்துள்ளார். தனது சொந்த ஊரான உத்தரபிரதேசம் மாநிலம், அசாம்நகரில் அவர் தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.