வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (16:28 IST)

அதிமுக தலைமை அலுவலகம் பக்கத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்!

அதிமுகவில் இருந்து விலகியுள்ள சசிகலா சமீபகாலமாக அந்த கட்சிக்குள் சேர்ந்துவிட முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை கட்சியை காப்பாற்ற வரவேண்டும் என தொண்டர்கள் சிலர் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இது சம்மந்தமான ஆடியோக்கள் வெளியாகி சசிக்லாவோடு பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிமுகவின் தலைவர்கள் எல்லாம் சசிகலாவுக்கு எதிராக பேசி வரும் நிலையில் இன்று சென்னை ராய்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு அருகே சசிகலாவுக்கு ஆதரவான வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ‘கழகமும் நீங்களே..! எங்கள் காப்பகமும் நீங்ககளே...’ என்ற வாசம் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.