வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2019 (15:48 IST)

சமீரா ரெட்டி வீட்டில் மீண்டும் "குவா குவா" சத்தம்! - வைரலாகும் குழந்தையின் கியூட் புகைப்படம்!

1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ  தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில்  துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு   கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமானார். 


 
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். 
 
பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் கவனித்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.  இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த அவர் கடந்த சில  நாட்களாக, தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார் 
 
இதற்கிடையில் சமீபத்தில்  பேட்டி ஒன்றில் என் மகனுக்கு ஒரு தங்கை வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டான் எனவே நிச்சயம் எனக்கு மகள் தான் பிறப்பால் என நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார். 


 
இந்த நிலையில் தற்போது மகனின் பிரார்த்தனையை  நிறைவேற்றியுள்ள கடவுள் சமீராவுக்கு ஒரு அழகான பெண்குழந்தை கொடுத்துள்ளார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சமீரா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  இன்று காலை அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக சமீராவின் அம்மா தெரிவித்துள்ளார். 


 
அவரது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குழந்தையின் கியூட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் , பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.