ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:34 IST)

3 படங்களை மொத்தமாக ஓடிடிக்கு தள்ளிய எஸ் ஆர் பிரபு!

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தான் தயாரித்துள்ள 3 படங்களை மொத்தமாக ஓடிடியில் ரிலிஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை மாஸ்டர் படத்துக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருந்தார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. ஆனால் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ள அவர் ஹாட்ஸ்டார் ப்ளஸ் டிஸ்னியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இந்த படத்தோடு அவர் சிபிராஜ் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோரை வைத்து தயாரித்துள்ள மற்ற இரண்டு படங்களையும் பேக்கேஜாக மொத்தமாக விற்றுள்ளாராம். 3 படங்களுக்கான விலையில் இப்போது பேரம் நடந்து வருவதால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. எஸ் ஆர் பிரபுவின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சூர்யா குடும்பத்தினரை ஓரம்கட்ட வேண்டும் என நினைப்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.