1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (19:48 IST)

பொம்பள ‘தல’: யாரை அப்படி சொன்னார் ரோபோ சங்கர்?

மாரி 2 படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரோபோ சங்கர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில்  நடித்திருக்கின்றனர்.
 
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே மாரி 2 படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக மாரி-2, வரும் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ரோபோ சங்கர், மாரி 2 வில் செம ஜாலியாக ஒர்க் பண்ணேன். தனுஷ் சார் வேர லெவல். தான் ஒரு மிகப்பெரிய நடிகர் என காட்டிக்கொள்ளவே மாட்டார். அடுத்ததாக சாய்பல்லவி, கிழிகிழின்னு கிழிச்சுட்டாங்க அவுங்க. மாரி 2 மூலம் சாய் பல்லவியின் வேறு ஒரு முகத்தை பார்க்கப் போகிறோம். 
 
அதுனாலயே அவரின் பெயரை பொம்பள தல என டைட்டில் கார்டிலேயே போடச் சொல்லிட்டோம். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை. இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகும் என ரோபோ பேசினார்.