1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2019 (13:03 IST)

படுக்கைக்கு அழைத்த நடிகரின் மானத்தை வாங்கிய ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். 
 
சினிமாவில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை குறித்து வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்து சம்மந்தப்பட்ட நபரின் முகத்திரையை கிழித்து காண்பிப்பதே மீடூ. இதில் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நடந்த அநீதிகளை குறித்து தெரிவித்துவந்தனர். குறிப்பாக ஸ்ரீ ரெட்டி, சின்மயி போன்றோரின் விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன்னை  ஒரு நடிகர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
ஆனால்,  அந்த நடிகர் யார் என்பதை நடிகை ரகுல் பிரீத் சிங் கூற வில்லை. ஏன் என்றால் அவர் இந்த விஷயத்தை டீசன்டாக தான் தன்னிடம் கேட்டதாகவும் அதற்கு தானும் பெரிதாக அலப்பறை செய்யாமல் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.மேலும் இது போன்ற பிரச்சனைகள் சினிமா உலகில் பல சர்ச்சைகளை கிளப்பி  வருவதால் சினிமா துறையே அதற்கு பொறுப்பெடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.