1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (10:44 IST)

திரைப்பட தயாரிப்பாளரோடு காதலை அறிவித்த ரகுல் ப்ரீத் சிங்!

முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் சினிமா தயாரிப்பாளரான ஜாக்கி பனானியை காதலிப்பதை உறுதி செய்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது அவரின் அடுத்த பட தயாரிப்பாளரான ஜாக்கி பனானி ரகுல் பிரித் சிங்குக்கும் தனக்கும் இடையே உள்ள காதலை ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்தார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த் ரகுல் ‘தன் வாழ்வில் வண்ணம் சேர்த்ததுக்கு நன்றி ‘ எனத் தெரிவித்துள்ளார்.