வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 25 ஜூலை 2016 (10:23 IST)

சென்னை திரும்பினார் ரஜினி

சென்னை திரும்பினார் ரஜினி

அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி கபாலி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், சென்னை திரும்பியுள்ளார்.


 
 
கபாலி, 2.0 என இரு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்த ரஜினி, கபாலி படத்தை முடித்தபின் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார். அவர் இரண்டு வாரங்களில் சென்னை திரும்புவதாக கூறப்பட்டது. ஆனால், அவர் மாதக்கணக்கில் அமெரிக்காவில் தங்கவே, அவருக்கு உடம்பு சரியில்லை, சிகிச்சை எடுக்கிறார் என்று வதந்தி பரவியது. அதனை அவரை வைத்து படம் செய்கிறவர்கள் மறுத்தனர். அவர் பூரண நலத்துடன் இருப்பதாக அறிவித்தனர். அமெரிக்காவில் ரஜினி ஷாப்பிங் செல்லும், மகளுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் ரஜினியின் ஆரோக்கியத்துக்கு சான்றாக வெளியிடப்பட்டன.
 
கபாலி 22 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட போது, 20 -ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கபாலியை வெளிநாட்டில் பார்த்த ரஜினி இன்றுதான் சென்னை திரும்பியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்