1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (10:26 IST)

இளையராஜா பேட்டியை பகிர்ந்த ரஹ்மான்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் பேட்டியை ரஹ்மான் பகிர்ந்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘ஒரு பாடல் என்பது இன்று பூத்த பூ போல புதிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த பாடலை எப்போது கேட்டாலும் ஈர்க்கும். அப்படிப்பட்ட பாடலைதான் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரும்ப கேட்பார்கள்’ எனக் கூறியிருந்தார்.

ராஜாவின் இந்த பேட்டி குறித்து இணையதளம் செய்தி வெளியிட, அதை ரஹ்மான் தன்னுடைய டிவிட்டர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ரஹ்மானின் டிவீட் கவனம் பெற பல சினிமா துறையினரும் அந்த டிவீட்டை பகிர்ந்து வருகின்றனர்.