வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (11:33 IST)

புஷ்பா 2 ஓடிடி உரிமை இத்தனைக் கோடியா..? கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 15 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இதற்குக் காரணம் ஷூட்டிங் சம்மந்தமாக இயக்குனர் சுகுமாருக்கும், அல்லு அர்ஜுனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் படத்தின் அனைத்து மொழி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 270 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இந்தியாவில் எந்தவொரு படத்துக்கும் இவ்வளவு பெரிய தொகைக் கொடுக்கப்பட்டதில்லை என சினிமா வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நிலையில் ஓடிடியில் ஜனவரி 5 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.