1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (10:46 IST)

பொன்னியின் செல்வன் பிளாஷ்பேக் காட்சிகள்… 25 நாளில் மொத்த படமும் முற்றும்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளை பொன்னியின் செல்வன் படக்குழு விரைவில் படமாக்க உள்ளதாம்.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

முதல்பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் முக்கியமான ஒரு பிளாஷ்பேக் காட்சியை மொத்தமாக 25 நாட்கள் படமாக்க உள்ளதாம் படக்குழு. அதோடு மொத்த படமும் முடிய உள்ளதாம். இந்த பிளாஷ்பேக் காட்சிகளில் டி ஜே அருணாச்சலம் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.