1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (14:28 IST)

கர்நாடகாவில் தொடங்கிய பத்து தல படப்பிடிப்பு… வைரல் புகைப்படம்!

சிம்பு கௌரவ வேடத்தில் நடிக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகள் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்து வருகின்றன. படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரியா பவானி சங்கரும், கவிஞர் மனுஷ்யபுத்திரனும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.