1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (17:05 IST)

ஓடிடிதான் எதிர்காலமாக இருக்கும்… மணிரத்னம் ஆருடம்!

இயக்குனர் மணிரத்னம் ஓடிடிதான் சினிமாவின் எதிர்காலமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

கொரோனா கால ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இதில் பணிபுரிந்த முன்னணிக் கலைஞர்கள் யாருமே சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் பணிபுரிந்ததாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓடிடிகளின் வளர்ச்சி குறித்து பேசியுள்ள மணிரத்னம் ‘ஓடிடி தளங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. அவைதான் சினிமாவின் எதிர்காலமாக இருக்கும். இயக்குநர்களுக்குப் பெரிய சாதகமான தளம். இரண்டு மணிநேரப் படங்களையும் இயக்கலாம். அதைவிட அதிகமான ஆந்தாலஜிகளையும் இயக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.