சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (16:58 IST)

ஒரே நாளில் டப்பிங்கை முடித்த நயன்தாரா!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு நயன்தாரா தானே சொந்தமாக டப்பிங் பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இப்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து இந்த படத்துக்காக நயன்தாரா தானே சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார். இதற்கு முன்னதாக அவர் நானும் ரௌடிதான் படத்தில் டப்பிங் பேசினார். அவரின் மற்ற படங்களுக்கு எல்லாம் டப்பிங் குரல் கலைஞர் தீபா வெங்கட்தான் டப்பிங் பேசி வருகிறார்.

இந்நிலையில் படத்தில் தனக்கான காட்சிகளுக்கு ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்பதால் நயன்தாராவின் காட்சிகள் கம்மிதான் என்பதால் ஒரே நாளில் பேசி முடித்துள்ளதாகவும் சொலல்ப்ப்படுகிறது.