வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (13:55 IST)

இயக்குனரின் காலில் விழுந்து கதறி அழுத நயன்தாரா - வைரலாகும் வீடியோ!

தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான். ஹீரோக்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்துள்ள அவர் இந்த இடத்தை பிடிக்க பல்வேறு துயரங்களை சந்தித்துள்ளார்.

ஆம், நயன்தாராவின் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு தெலுங்கில் வெளியான  ஸ்ரீராம ராஜ்யம் படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாரா காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்து சமய இதிகாசங்களில் ஒன்றான ராமாயண கதையை மையமாகக் கொண்டு வெளியான இப்படத்தில் நயன்தரா சீதையாக நடித்தற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து அவரை கீழ்த்தரமாக பேசினர்.

ஆனால், அதெயெல்லாம் மீறி படத்தை நல்லபடியாக நடித்துமுடித்து கொடுத்தார் நயன். இதனை பாராட்டி கடைசி நாள் படப்பிடிப்பின் போது நயன்தாரா மீது மலர்களைத் தூவி வாழ்த்துக்கள் கூறினர். அப்போது உணர்ச்சிவப்பட்டு அழுது அங்கிருந்த இயக்குனரின் காலில் விழுந்த நயன்தாராவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைராகி வருகிறது.