1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:23 IST)

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நான்தான் - முருகதாஸ் வீடியோ

சர்கார் கதை வருண் ராஜேந்திரனுடையது என முருகதாஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், இதுபற்றி முருகதாஸ் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

 
விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் கதை  வருண் ராஜேந்திரனுடையதுதான் எனவும், படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரன் பெயரை போடுவதற்கு முருகதாஸ் நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. எனவே, முருகதாஸ் கதையை திருடி எடுத்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பதிவுகளும், மீம்ஸ்களும் பரவி வருகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள முருகதாஸ் “ வழக்கம் போல் வதந்தி பரவி வருகிறது. பாக்யராஜ் என்னை அழைத்து, கள்ள ஓட்டுப் போடுவதால் பொங்கி எழும் நாயகன் பற்றிய மையக்கருவும், உங்கள் கருவும் ஒன்றாக உள்ளது. மற்றபடி இரு கதைக்கும் தொடர்பில்லை எனவும், ஆனால், இதேபோல் ஒரு கதையை ஒரு உதவி இயக்குனர் பதிவு  செய்திருந்ததால், அவருக்கு ஊக்குவிக்கும் வகையிலும், பாராட்டும் வகையிலும் மரியாதை செய்யும் படிக் கேட்டுக்கொண்டார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். மற்றபடி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.  முருகதாஸ்தான்” என முருகதாஸ் கூறியுள்ளார்.