ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 மே 2021 (16:43 IST)

பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் செய்த சாதனை!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மட்டும் இன்னும் மீதமுள்ளது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டிராவில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் வேகமாக பரவும் கொரோனா தொற்றால் மகாராஷ்டிராவில் கடுமையான கட்டுப்பாடுகளோடு இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போது படப்பிடிப்பு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் படப்பிடிப்பு ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக பல நட்சத்திரங்களைக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் 200 நாள்களுக்குள் நடத்தி முடிக்க உள்ளாராம் மணிரத்னம். இதே போன்ற கதையம்சம் கொண்ட பாகுபலி திரைப்படம் 500 நாட்களில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.