1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (18:49 IST)

மாநாடு 100 ஆவது நாள்… தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி!

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் திரையுலகமே வியக்கும் அளவில் ஹிட்டடித்தது.

மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.

இதனால் இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டும் தொலைக்காட்சியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டும் இந்த படம் சென்னையில் ஒரு திரையரங்கில் இன்னும் ஓடி வருகிறது. 100 ஆவது நாளை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ’கோடான கோடி நன்றிகள்’ எனக் கூறியுள்ளார்.