1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 மே 2021 (15:53 IST)

மக்களுக்கு உதவி செய்த முன்னணி நடிகை

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்று தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது. இது நீட்டிக்கப்படலாம் என்ற கருத்து நிலகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையும் , விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் புகழ்பெற்ற  தர்ஷா குப்தா மீனவ மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

இன்று சென்னை ராயபுரத்தில் வாழ்வாதாரம் இன்றித் தவித்து வரும் மீனவக் குடும்பத்திற்உ அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார் தர்ஷா குப்தா. இதுகுறித்து அவர் கூறும்போது, இது சிறிய அளவிலான உதவி என்றாலும் மற்றவர்களும் இதுபோல் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தர்ஷா குப்தா தற்போது ருத்ர தாண்டவம் படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.