1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (09:01 IST)

கனகா என் போன் காலை எடுக்க மாட்டேங்குறார்… புலம்பித் தள்ளிய குட்டி பத்மினி!

கனகா, பழைய கதாநாயகி தேவிகாவின் ஒரே மகள். கரகாட்டகாரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் மற்றும் பிரபு ஆகியோரோடு இணைந்து பல படங்களில் நடித்தார். 90 களில் முன்னணி நாயகியாக வலம் வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தன. ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என்று கனகா கூறினார்.

தேவிகா  கதாநாயகியாக   நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு, கனகாதான். தனது அம்மாவின்  பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார். தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயம் அவரது மனதில் பயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால்தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லையாம்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி கனகாவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து, அவரோடு புகைப்படம் எடுத்து அதை வெளியில் பகிர்ந்துள்ளார். அதில் காணப்படும் கனகா, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் காணப்படுகிறார். பலரும் இந்த புகைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 

கனகாவை சந்தித்தது பற்றி ஒரு நேர்காணலில் பேசிய குட்டி பத்மினி “நான் நடத்தும் ஒரு யுட்யூப் சேனலில் நேர்காணல் கொடுக்க கனகா சம்மதித்துள்ளார். விரைவில் அந்த நேர்காணல் வரும்” என்று கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் எப்போது அந்த நேர்காணல் ஒளிபரப்பாகும் என நச்சரித்துக் கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் அதற்கு பதிலளித்துள்ள குட்டி பத்மினி “கனகா இப்போது என் போன் கால்களுக்கோ அல்லது வாடஸ் ஆப் மெஸேஜ்களுக்கோ பதிலளிப்பதே இல்லை.  அவருக்கு தனிமைதான் மிகவும் பிடித்திருக்கிறது. யாரையாவது நம்பி பழகினால் ஏமாற்றி விடுவார்களோ என்று அஞ்சுகிறார். அவரை பேட்டி எடுக்க முடியாமல் போனதை நினைத்து வருந்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.