1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 மார்ச் 2016 (15:04 IST)

குற்றப் பரம்பரையை பாலாதான் இயக்க வேண்டும் - எழுத்தாளர் பேச்சால் சர்ச்சை

குற்றப் பரம்பரையை பாலாதான் இயக்க வேண்டும் - எழுத்தாளர் பேச்சால் சர்ச்சை

குற்றப் பரம்பரை கதையை யார் படமாக்குவது என்பதில் பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதை ஏற்கனவே கூறியிருந்தோம்.


 


இந்நிலையில், குற்றப் பரம்பரை நாவலை எழுதிய வேல. ராமமூர்த்தி, பாலாதான் என்னுடைய குற்றப் பரம்பரை கதையை இயக்குகிறார், அதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
குற்றப் பரம்பரை எனது கனவு படம் என்று பாரதிராஜா பல ஆண்டுகளாக கூறி வருகிறார். இந்நிலையில், தொடர்ச்சியாக தோல்விப் படங்கள் தந்துவரும் பாலா இடையில் புகுந்ததோடு முழுவீச்சில் குற்றப் பரம்பரையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில்தான் வேல ராமமூர்த்தி பாலாவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.
 
எனினும் குற்றப் பரம்பரை கதையை படமாக்குவதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என பாரதிராஜா முடிவெடுத்துள்ளதால் சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது.