1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (11:33 IST)

விவாத நிகழ்ச்சியின் போது கூலாக சாப்பிட ஆரம்பித்த கஸ்தூரி –வைரலாகும் வீடியோ!

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தன்னைப் பேசவே விடாததால் நடிகை கஸ்தூரி கூலாக சாப்பிட ஆரம்பித்தது இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொலைக்காட்சி நிரூபரான அர்னாப் கோஸ்வாமி தன் விவாத நிகழ்ச்சிகளில் யாரையும் பேச விடாமல், தானே கத்தி பேசுவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் பாலிவுட்டில் நடக்கும் நெப்போட்டிசம் பற்றி அவரது டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. அதில் தமிழ் நடிகை கஸ்தூரி ஒரு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

ஆனால் அவரது கருத்தை பேச முயலும்போதெல்லாம் அர்னாப் குறுக்கிட்டு பேசிக்கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான கஸ்தூரி அருகில் வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். அது சமம்ந்தமான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.