செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (20:03 IST)

’காதல்’ பட நடிகருக்கு நேர்ந்த பரிதாபகரமான முடிவு!

’காதல்’ பட நடிகருக்கு நேர்ந்த பரிதாபகரமான முடிவு!
பரத் ’காதல்’ காதல் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபமான முடிவு திரையுலகை அதிர்ச்சி அடைந்துள்ளது
 
’காதல்’ திரைப்படத்தில் பாபு என்பவர் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருப்பார். இயக்குனரிடம் ஹீரோ வாய்ப்பு கேட்டு வரும் இவர் விருச்சிககாந்த் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். ஜோசியர் விருச்சிககாந்த் என தனது பெயரை மாற்றிக் கொண்டதாகவும் ரஜினிகாந்த் விஜயகாந்த் போல வரவேண்டும் என்பதுதான் தனது எண்ணம் என்றும் ஹீரோவாகி அதன்பின் அரசியல்வாதியாகி முதல்வராக தான் தனது எண்ணம் என்றும் வசனம் பேசியிருப்பார். இந்த வசனம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆக இருந்தது 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் வறுமையில் இருந்த பாபு, தாய் தந்தை இருவரும் மரணமடைந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் தெரிகிறது
 
இதனை அடுத்து அவர் பிச்சைக்காரர் போல் சாலைகளில் சுற்றித் திரிந்த புகைப்படத்தை பார்த்து திரையுலகினர் சிலர் அவருக்கு உதவி செய்தனர். இந்த நிலையில் சாலையோரம் நின்ற ஆட்டோவில் படுத்து உறங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது