செவ்வாய், 4 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 மார்ச் 2025 (18:37 IST)

அவர் இசைஞானி அல்ல, மெய்ஞானி.. இளையராஜாவுக்கு திருமாவளவன் புகழாரம்..!

இசைஞானி இளையராஜா மார்ச் 9ஆம் தேதி லண்டனில் சிம்போனி அரங்கேற்றம் செய்ய இருக்கும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
இசைஞானி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது. 
 
அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பதை நமக்குப் புரியவைக்கிறார். 
 
"இசை எனக்குத் தொழில் அல்ல; இசை என்னிலிருந்து வேறு அல்ல; இசையாகவே நான் வாழ்கிறேன்" - என அவர் விளம்புகிறபோது அவரின் விழிகளிலிருந்து வீசும் ஞானஒளியை உணரமுடிகிறது. 
 
அது-
தான் என்கிற அகந்தையின் வெளிப்பாடு அல்ல;  
தன்னை உணர்ந்துள்ள   மெய்ஞானத்தின் புலப்பாடு! 
 
அவர் இசைஞானி என்பதைவிட #மெய்ஞானி என்பதே பொருந்தும்.
 
Edited by Mahendran