வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (12:46 IST)

ரம்ஜானால் படப்பிடிப்புக்கு விடுமுறை விட்ட ஆர்யா

ரம்ஜான் நோன்பு திறந்துள்ளதால், படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டுள்ளார் ஆர்யா.

 
அமீர் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம் ‘சந்தனத்தேவன்’. ஆர்யாவின் தம்பி சத்யாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.  இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார் அமீர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு  இசையமைக்கிறார்.
 
ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளதால், அமீர், ஆர்யா இருவரும் நோன்பு வைத்துள்ளனர். இந்தப் படம் ஜல்லிக்கட்டை  மையப்படுத்தியது என்பதால், ஷூட்டிங்கில் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். சாப்பிடாமல் கடுமையாக உழைக்க முடியாது என்பதால், ரம்ஜான் முடியும்வரை இந்தப் படத்துக்கு பிரேக் விட்டிருக்கிறார்கள். அதற்குள், வெற்றிமாறனின் ‘வடசென்னை’  படத்தில் நடித்துவிடலாமா என்று யோசித்து வருகிறார் அமீர்.